இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இப்படி துன்பம் தருகிறதே ...!!!

இப்படி துன்பம் தருகிறதே ...!!! இருள் சூழ்ந்து சூழ்ந்து .... வரவர என் துன்பம் .... தொடர் கதைபோல் ... தொடர்கிறது பொழுதே ...!!! காலை பொழுதுக்கு ... என்ன நன்மை செய்தேன் .... இனிமையாக இருக்க .... மாலை பொழுதுக்கு ... என்ன துன்பம் செய்தேன் ... இப்படி துன்பம் தருகிறதே ...!!! குறள் 1225 + காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்  மாலைக்குச் செய்த பகை. + பொழுதுகண்டிரங்கல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 145

அவர் இல்லாத போது ..

அவர் இல்லாத போது .. என்னவனோடு ... நான் இருக்கும் பொழுது ... இன்ப மாலை பொழுது ... என் உயிரை வளர்க்கும் ... உயிர் பொழுது ....!!! எப்படி ...? அவர் இல்லாத போது .. நீ கொலை பொழுதாய் ... மாறி என் உயிரை ... எடுக்கிறாய் ....? நீ மயங்கி மயங்கி வரும் ... வேலை என்னை கொல்லும் பகைவன் போல் -நீ  குறள் 1224 + காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து  ஏதிலர் போல வரும். + பொழுதுகண்டிரங்கல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 144

துன்ப பொழுது ...!!!

துன்ப பொழுது ...!!! என்னவன் அருகில் .... இருக்கும் போது மெல்ல  மெல்ல பயந்து பயந்து ... என் மேனியில் படர்ந்த ... மாலை பொழுதே ....!!! இப்போ அவர் இல்லாத ... தருணத்தில் -நீ  நீ மாலை பொழுதல்ல ... உயிரை பறிக்க வரும் ... துன்ப பொழுது ...!!! குறள் 1223 + பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்  துன்பம் வளர வரும். + பொழுதுகண்டிரங்கல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 143

உன் காதலன் பிரிவுதானோ ...?

உன் காதலன் பிரிவுதானோ ...? மயங்கும்  மாலை பொழுதே ..... உன் மயக்கத்துக்கும் ... உன் காதலன் பிரிவுதானோ ...? புரிந்து கொள் பொழுதே .... துணை இல்லாவிட்டால் ... எல்லோர் காதலும் ... துன்பம் தரும் பொழுதே ...!!! மயக்கமும் மங்களும் ... நிறைந்த துன்பமே ....!!! குறள் 1222 + புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்  வன்கண்ண தோநின் துணை. + பொழுதுகண்டிரங்கல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 142

உயிர்வாங்கும் பொழுது ...!!!

உயிர்வாங்கும் பொழுது ...!!! மாலை பொழுதே .... நான் காதலருடன் இருந்த ... இன்ப பொழுதில் -நீ  மாலை பொழுதாய் ... இருந்தாய் .....!!! என்னவனை .... பிரிந்திருக்கும் பொழுது ... இது மாலை பொழுதல்ல ... என்னை கொல்லும்.... உயிர்வாங்கும் பொழுது ...!!! குறள் 1221 + மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்  வேலைநீ வாழி பொழுது. + பொழுதுகண்டிரங்கல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 141

கனவு காண்பதில்லையோ...?

கனவு  காண்பதில்லையோ...? நேரில் வரவில்லை ... மனம் நோகும் .... நொந்துகொண்டிருக்கும் ... காதலர்களே .... நீங்கள் கனவு  காண்பதில்லையோ...? கனவில் வருவதும் ... நினைவில் வருவது ... ஒன்றுதான் -நீங்கள்  கனவு காணாததால் ..... புலம்புகிறீர்கள் ....? குறள் 1220 + நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்  காணார்கொல் இவ்வூ ரவர். + கனவுநிலையுரைத்தல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 140

கனவில் காணாத ஜீவன்கள்

கனவில் காணாத ஜீவன்கள் என்னவனே -நீ  வரவில்லை வரவில்லை .. புலம்பிகொண்டிருந்தேன்.... இப்போ இன்பமடா .... கனவில் வருகிறாயே ....!!! கனவில் காணாத .... ஜீவன்கள் தான் - அவர் நினைவால் புலம்புவர் .... நொந்து மடிவர் ....!!! நேரில் வருவது கனவும் ... ஒன்றுதானே மனமே ....!!! குறள் 1219 + நனவினால் நல்காரை நோவர் கனவினால்  காதலர்க் காணா தவர். + கனவுநிலையுரைத்தல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 139

கனவில் இத்தனை இன்பமா ...?

கனவில் இத்தனை இன்பமா ...? தூக்கத்தில் கனவில் ... வந்து என் தோள் மீது சார்ந்து ... எனக்கு இன்பம் தந்த்தவனே ... கனவில் இத்தனை இன்பமா ...? கனவு கலைந்து... என்னை விட்டு விலகாமல் ... என் நெஞ்சில் இருப்பவனே ... விழித்தாலும் மறைந்தாலும் ... நீ என் அருகில் தானே ....!!! குறள் 1218 + துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்  நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. + கனவுநிலையுரைத்தல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 138

வேடிகையாகிவிட்டது ....!!!

வேடிகையாகிவிட்டது ....!!! நேரில்  வருவார் வருவார்  என்று ஏக்கத்தை தருவதும் .... வராமல் என்னை வேதனை ... படுத்துவதும் அவரின் .... வேடிகையாகிவிட்டது ....!!! நேரில் வராமல் ... கனவில் வந்து என்னை ... துன்பப்படுத்துவது .... துயரை பெரிதாக்குவதும் ... என்ன காரணம் உயிரே ...!!! குறள் 1217 + நனவினால் நல்காக் கொடியார் கனவனால்  என்எம்மைப் பீழிப் பது. + கனவுநிலையுரைத்தல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 137

நினைவும் ஒரு எதிரி தான் .....!!!

நினைவும் ஒரு எதிரி தான் .....!!! நினைவும்  ஒரு எதிரி தான் ..... நினைத்து கொண்டே  இருப்பதால் ... கனவு காண்பது எப்படி ...? ஏய் நினைவே ... நீ மட்டும் என்னில் .... இல்லாமல் ... இருந்திருந்தால் -கனவில்  என்னவன் என்னோடு ... இருந்திருப்பாரே ....!!! குறள் 1216 +  நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்  காதலர் நீங்கலர் மன். + கனவுநிலையுரைத்தல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 136

நீர் கனவில் வரும் இன்பம்

நீர் கனவில் வரும் இன்பம்  என்னவனே ... உம்மை நேரில் கண்ட ... இன்பம் போல் இருக்கிறது .. நீர் கனவில் வரும் இன்பம் .... உண்மையை சொன்னால் .... எனக்கு ஒரு வேறுபாடும் ... தெரியவில்லை நீர் .... கனவில் வரும் வேளை ...!!! குறள் 1215 +  நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்  கண்ட பொழுதே இனிது. + கனவுநிலையுரைத்தல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 135

இன்பத்தோடு இருக்கிறேன் ....

இன்பத்தோடு இருக்கிறேன் .... நீர்  நேரில் வந்து .... அன்பு காட்டாவிட்டாலும் ... இன்பத்தோடு இருக்கிறேன் .... அத்தனைக்கும் நீர் ... கனவில் வந்து செல்வதே ... காரணம் ....!!! நீர்  இருக்கும் இடம் தெரியாது .... என்ன செய்கிறீர் என்றும் ... தெரியாது .... கனவு எல்லாவற்றையும்... எனக்கு காட்டுகிறது ....!!!  குறள் 1214 +  கனவினான் உண்டாகும் காமம் நனவினான்  நல்காரை நாடித் தரற்கு. + கனவுநிலையுரைத்தல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 134