இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைக்காமல் இருக்க முடியுமோ ...?

நினைக்காமல் இருக்க முடியுமோ ...? நீயும் நானும் .... நினைத்து என்னபயன் ...? மனசே ...!!! அவர் நம்மை நினைக்க ... மறுக்கிறாரே ....!!! என்ன செய்யமுடியும் ...? மனசே ...? அவர் நினைகவில்லை... என்பதற்காக நாம் ... நினைக்காமல் இருக்க முடியுமோ ...? குறள் 1245 + செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்  உற்றால் உறாஅ தவர். + நெஞ்சொடுகிளத்தல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 165

கண்களை அழைத்து செல் ...!!!

கண்களை அழைத்து செல் ...!!! நெஞ்சே .... என்னவனிடம் நீ போ ... என்னை அழைத்து ... செல்லாவிடினும் - என்  கண்களை அழைத்து செல் ...!!! நீ மட்டும் ..... தனியாக போகாதே ... என் கண்கள் என்னை  கொல்வதுபோல் பார்கின்றன ...!!! குறள் 1244 + கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்  தின்னும் அவர்க்காணல் உற்று. + நெஞ்சொடுகிளத்தல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 164

வந்தான் காதலை தந்தான் ...

வந்தான் காதலை தந்தான் ... மனசே ...!!! வந்தான் காதலை தந்தான் ... சென்றான் நினைவுகளை ... மட்டும் தந்தான் - நம்மை  நினைக்காத அவரை நானும் .. நீயும் நினைபெதென்ன பயன் ...? உன் துணிவை பார் ... என்னிடம் இருந்து அவரையே ... நினைகிறாயே....!!! அவரோ எம்மை பற்றி ... நினைப்பதே இல்லையே ...!!! குறள் 1243 + இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்  பைதல்நோய் செய்தார்கண் இல். + நெஞ்சொடுகிளத்தல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 163

மனசே நீ வாழ்க ....!!!

மனசே நீ வாழ்க ....!!! காதலை தந்தவன் .... காலமெல்லாம் வலியை .. தருகிறான் - மனசே !!! நீ அவரை நினைக்கிறாயே ...! என் மனமே .... அவர் நினைக்காதபோது ... நீ நினைத்துகொண்டு ... இருப்பது உன் மூடத்தனமோ ...? மனசே நீ வாழ்க ....!!! குறள் 1242 + காதல் அவரிலர் ஆகநீ நோவது  பேதைமை வாழியென் நெஞ்சு. + நெஞ்சொடுகிளத்தல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 162

வலியை தந்த நீ ...

வலியை தந்த நீ ... ஏய் மனசே ....!!! உனக்கு வேலையில்லையா ...? எந்த நேரமும் என்னவனை ... நினைத்து வலி தருகிறாயே ...? மனசே .... நினைத்து நினைத்து ... வலியை தந்த நீ ... ஒரு வேலை செய்வாயோ .... வலியை தீர்க்கும்  மருந்தையும் தருவாயோ ...? குறள் 1241 + நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்  எவ்வநோய் தீர்க்கும் மருந்து. + நெஞ்சொடுகிளத்தல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 161