இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நானும் நீயும் நினைத்து ...

நானும் நீயும் நினைத்து ... ---------------------------------- எம்மை சேராமல் ... எம்மை நினைக்காமல் .. பிரிந்து சென்ற என்னவன் எப்படி இருக்கிறானோ ..? எம்மை நினைக்காத அவரை நானும் நீயும் நினைத்து ... உடல் மெலிந்து உளமும் மேலியப்போகிறது...!!! குறள் 1250 + துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். + நெஞ்சொடுகிளத்தல் + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 170

அலையாதே மனசே ...

அலையாதே மனசே ... --------------------------- ஏய் மனசே ...!!! என்னவன் என் மனதில் .. குடிகொண்டு வதைக்கிறான் .. நீ எங்கே அவனை தேடுகிறாய் ...? அலையாதே மனசே ... என்னவன் வெளியில் இல்லை  வந்து பார் என்னுள்ளே தான்  இருக்கிறான் ....!!! குறள் 1249 + உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ  யாருழைச் சேறியென் நெஞ்சு. + நெஞ்சொடுகிளத்தல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 169

நீ என்ன அறிவில்லாதநீயா ..?

நீ என்ன அறிவில்லாதநீயா ..? -------------------------------------- என் மனசே .... உன்னையும் என்னையும் ... என்னவன் மறந்துவிட்டான் .. நம்மை பிரிந்து சென்று ... விட்டான் .....!!! எதற்காக மனசே ... அவர்பின்னால் செல்கிறாய் ... நீ என்ன அறிவில்லாதநீயா ..? என் மனது அறிவற்ற பேதை  தான் போலிருக்கிறது ...!!! குறள் 1248 + பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்  பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. + நெஞ்சொடுகிளத்தல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 168

துடிப்பதை நிறுத்து ...!!!

துடிப்பதை நிறுத்து ...!!! -------------------------------- ஓ மனமே .... என்னவனை நினைத்து ... துடிப்பதை நிறுத்து ...!!! என்னவனோடு நான் .. இணைவதை தடுக்கும்  நாணத்தை நிறுத்து ... இரண்டையும் - நீ  என்னுள் இருந்து நீ  செய்தால் என் நிலை ...? குறள் 1247 + காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே  யானோ பொறேன்இவ் விரண்டு. + நெஞ்சொடுகிளத்தல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 167

நடித்தது போதும் மனசே ...!!!

நடித்தது போதும் மனசே ...!!! ----------------------------------- ஓ நெஞ்சே .... என்னவனுடன்  கூடியபோது ... என்னுடன் சேர்ந்து நீயும் ... கூடினாய் இன்புற்றாய்....!!! எதற்காக ...? இப்போ நடிக்கிறாய் ...? என்னவன் கெட்டவன் என்று ...? நடித்தது போதும் மனசே ... என்னவனோடு இணைந்துவிடு ...!!! குறள் 1246 + கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. + நெஞ்சொடுகிளத்தல் + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 166