இடுகைகள்

ஜூலை, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பகைவன் கூட நட்பை விரும்புவான் ....!!!

பகைவன் கூட நட்பை விரும்புவான் ....!!! நீண்ட கால நட்பு .... தவறுகள் செய்தாலும் .... அறிவுடைய நண்பர்கள் .... பொறுத்துகொள்வர் ....!!! அறிவுள்ள நட்பை .... பிரியாதோரை..... அவர்களின் பகைவன்கூட ..... மனதார விரும்புவர் ....!!! + குறள் 810 + பழைமை + விழையார் விழையப் படுப பழையார்கண்  பண்பின் தலைப்பிரியா தார். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -30

நம் நட்பின் உறவை உலகம் அறியும் ....!!!

நம் நட்பின் உறவை உலகம் அறியும் ....!!! உன்  உரிமையை நீயும் .... என்  உரிமையை நானும் .... விட்டுகொடுக்காமல் .... நீண்டகாலம் நட்பு ... கொள்கிறோம் ......!!! எமக்கிடையே ... கெடுதல் வந்தாலும் .... நாம் பிரியோம் .... நம் நட்பின் உறவை .... உலகம் அறியும் ....!!! + குறள் 809 + பழைமை + கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை  விடாஅர் விழையும் உலகு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -29

அச்சமடைகிறேன் நண்பா ...!!!

அச்சமடைகிறேன் நண்பா ...!!! கூறினார்கள் நண்பா ..... நீ தப்பாக என் உரிமையை .... பயன்படுத்தி தப்பு செய்கிறாய் .... அயலவர் கூறினார்கள்.... என்றாலும் நம்பவில்லை ....!!! உண்மையில் நண்பா .... நீ தப்புசெய்திருந்தால் .... இத்தனை நாள் நாம் கொண்ட .... நட்பு வீணாகிவிடுமே ... அச்சமடைகிறேன் நண்பா ...!!! + குறள் 808 + பழைமை + கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு  நாளிழுக்கம் நட்டார் செயின். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -28

கவலை எனக்கேதுமில்லை ....!!!

கவலை எனக்கேதுமில்லை ....!!! தெரியும் நண்பா.... நீ செய்வது எனக்கு .... தீமையில் முடியும் .... அறிந்திருந்தேன் .... என்றாலும் கவலை ... எனக்கேதுமில்லை ....!!! சிறுவயதிலிருந்து .... நாம் பேணும் நட்பு .... தீமைகள் வந்தாலும் ... பொருத்துகொள்ளும்... நண்பனே ....!!! + குறள் 807 + பழைமை + அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்  வழிவந்த கேண்மை யவர். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -27

நட்பு பிரியாது தோழா ....!!!

நட்பு பிரியாது தோழா ....!!! நண்பனே .... நாம் கொண்ட நட்பு ..... எல்லை தாண்டாத நட்பு .... எல்லையற்ற நட்பு ....!!! உன்னால் எனக்கு துன்பம் ... எதற்காக கலங்குகிறாய் ....? என் உயிர் பிரிந்தாலும் -நம் .... நட்பு பிரியாது தோழா ....!!! + குறள் 806 + பழைமை + எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்  தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -26

அத்துனையும் மறப்பேன் அன்பே ....!!!

அத்துனையும் மறப்பேன் அன்பே ....!!! கண்ணுக்கு மைதீட்டும் .... கருவி காணாமல் ... போனதை தேடுவதுபோல் ...!!! என்னவனை ... கண்ணும்போது ... தந்த துன்பத்தையெல்லாம் ..... மறந்து இன்பம் தேடுவேன் ....!!! + குறள் 1285 + புணர்ச்சிவிதும்பல்  + எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்  பழிகாணேன் கண்ட இடத்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 205

உன்னை கண்டவுடன் ...

உன்னை கண்டவுடன் ... என்னவனே ... உன்னை கண்டவுடன் ... நீ செய்த தவறெல்லாம் .... பஞ்சாய் பறக்குதடா ....!!! என் மனசோ ... நீர் தந்த துன்பம் எல்லாம்  மறத்து இணையவே ... துடிக்கிறது ....!!! + குறள் 1284 + புணர்ச்சிவிதும்பல்  + ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து  கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 204

நீ என்னை பார்க்காமல் ....

நீ என்னை பார்க்காமல் .... என்னவனே  என்னை நீ அவமதித்து ... எதை செய்தாலும் ... என் கண்கள் உன்னையே ... தேடுமன்பே..... நீ  என்னை பார்க்காமல் .... உமது வேலைகளை ... செய்தாலும் என் கண்கள் ... உன்னையே தேடுமடா ... என்னவனே ....!!! + குறள் 1283 + புணர்ச்சிவிதும்பல்  + பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்  காணா தமையல கண். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 203

காதல் பனையளவு வந்தாலும் ....

காதல் பனையளவு வந்தாலும் .... காதல்  பெண்களுக்கு .... பனையளவு பெருகிவரினும்.... காதலனுடன் ... கடுகளவேணும்... ஊடல் கொள்ளாதிருக்க ... வேண்டும் .....!!! காதல் எத்தனை ... இன்பத்தை தந்தாலும் .... காதலி நிலைகுலையாது ... காத்தல் நன்று ....!!! + குறள் 1282 + புணர்ச்சிவிதும்பல்  + தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்  காமம் நிறைய வரின். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 202

காதலை நினைத்தாலே இன்பம்

காதலை நினைத்தாலே இன்பம்  மது பருகினால் ..... இன்பத்தை ... பெருகித்தரும் .... காதல் இன்பம் ... பார்த்தவுடனேயே .... பெருகும் .....!!! காதல் ... நினைத்தாலும்...  பார்த்தாலும் .... இன்பம் தரும் .... இன்பஊற்று ...!!! + குறள் 1281 + புணர்ச்சிவிதும்பல்  + உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்  கள்ளுக்கில் காமத்திற் குண்டு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 201

கவலை படாதே நண்பா ....

கவலை படாதே நண்பா .... கவலை படாதே நண்பா .... நீ செய்த செயலால் நான் ... வருந்தவில்லை .... எனக்கு தீமையாகிவிட்டதே... என்று கவலைபப்படாதே ...!!! நீ  அறியாமல் செய்யவில்லை ... என் மீதுள்ள உரிமையால் .. செய்த தவறை மன்னிக்கிறேன் .... இல்லையேல் நம் நட்பில் ... என்ன பயனுண்டு .....? + குறள் 805 + பழைமை + பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க  நோதக்க நட்டார் செயின். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -25

அறிவற்ற நண்பனில்லை நான் ....!!!

அறிவற்ற நண்பனில்லை நான் ....!!! மன்னித்துவிடு நண்பா .... உன் மீது வைத்த உரிமை ... நட்பால் உன்னை கேளாது .... ஒரு செயல் செய்துவிட்டேன் ... உனக்கு பிடிக்குமோ ....? புரியவில்லை .....!!! நீ எதை செய்தாலும் ... என் நன்மைக்காகவே ... செய்திருப்பாய் ....! அதைகூட புரியாத அறிவற்ற ... நண்பனில்லை நான் .... உன் பழமை மாறாநண்பன்....!!! + குறள் 804 + பழைமை + விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்  கேளாது நட்டார் செயின். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -24