செந்தாமரை மத்தியில் ....
செந்தாமரை மத்தியில் .... அறிஞர்கள் கூடிய .... மகாசபையில் .... அறிவற்றவன் ஒருவன் .... அமர்ந்திருந்தால் ..... செந்தாமரை மத்தியில் .... நாற்றம் எடுக்கும் பிணம் ... போன்றது ....!!! மஞ்சு மெத்தையில் .... கழுவாத காலுடன் .... மிதிப்பதுபோல் .... பேதை ஒருவன் .... அறிஞர்கள் மத்தியில் .... இருப்பதாகும் .....!!! + குறள் 840 + பேதைமை + கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 60