இடுகைகள்

டிசம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒப்புகொள்வதில்லை

ஒப்புகொள்வதில்லை ------------- ஒன்றுமே இல்லாதவன் .... ஒப்புகொள்வதில்லை .... எல்லாம் தெரிந்ததுபோல்  நடித்துக்கொள்வான் ,,,,!!! அறியாமையை .... ஏற்றுகொள்ளாதவன்..... பாதாள குழிக்குள் .... விழுந்துகொண்டிருக்கிறான் ....!!! + குறள் 849 + புல்லறிவாண்மை + காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்  கண்டானாம் தான்கண்ட வாறு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 69

தானாக திருந்து நண்பா

தானாக திருந்து நண்பா ----------- ஒன்றில்  தானாக திருந்து நண்பா .... நான் சொல்வதை கேட்டு .... திருந்து நண்பா .....!!! சொந்த புத்தியும் இல்லை .... சொல் புத்தியும் இல்லை .... இவர்களே உலகில் -எந்த  மருந்தாலும் மாற்ற முடியாத .... பெரும் நோயாளிகள் ....!!! + குறள் 848 + புல்லறிவாண்மை + ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்  போஒம் அளவுமோர் நோய். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 68

அறிவிலிகள் இவர்களே ....!!!

நல்லதையே செய் ... நல்லத்தையே கேள்.... நல்லதையே பார் ... என்ற தத்துவத்தை ..... கடைபிடிக்காதவர் .... அறிவிலிகள் இவர்களே ....!!! அறிவில்லாதவன் .... இதை செய்யாதவன் .... யானை தன் தலையில் ... மண் அள்ளி போட்டதுபோல் ....!!! + குறள் 847 + புல்லறிவாண்மை + அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 67

குற்றத்தை மறைக்க

செய்த .... குற்றத்தை ஒப்பு கொள்.... செய்த குற்றத்தை மேலும் .... செய்யாதே - அது மடமை ....!!! குற்றத்தை மறைக்க ... இன்னுமொரு குற்றத்தை ... செய்துகொண்டே இருப்பது .... உடலை அழகு படுத்த ... உடையை மாற்றும் மாயையாகும் ....!!! + குறள் 846 + புல்லறிவாண்மை + அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 66