இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருக்குறள் வசனக்கவிதை

சொல் நீ யார் ...? உயிரை எடுக்கும் யமனா ...? மாய மானா ...? உடலில் படரும் தாமரை ... கொடியா ...? எல்லாம் கலந்த கலவையா ...? + குறள் - 1085 + கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து. + திருக்குறள் வசனக்கவிதை

திருக்குறள் வசனக்கவிதை

பேரழகி நீ உன் பார்வையோ ... உயிரையே வதைக்கும் ....! உன் அறிவையும் அழகையும் தாண்டி ... வதைக்கிறது என்னை ...!!! + குறள் - 1084 + கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண். + திருக்குறள் வசனக்கவிதை

திருக்குறள் வசனக்கவிதை 03

என்னை கொல்வதற்கு யமனும் வரத்தேவையில்லை ... பாசக்கயிறும் தேவையில்லை .... உன் பார்வையே போதும் ... இறந்து விடுவேன் ....!!! +++ குறள் - 1083 பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு. +++ திருக்குறள் வசனக்கவிதை

திருக்குறள் வசனக்கவிதை 02

நான் நோக்கிய போது .. நீயும் நோக்கினாய் .... செத்தேனடி நான் ....! உன் கண் ... அணுமின் கதிர் ..... ஒரு நாட்டின் சேனை ... இரண்டாலும் கொன்று ... விட்டாயே என்னை ....!!! +++ குறள் - 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. +++ திருக்குறள் வசனக்கவிதை

திருக்குறள் வசனக்கவிதை -01

என் கண்ணில் பட்டவளே.....!!! நீ பிரம்மனின் .... தங்க தேவதையா ....? தெய்வீக தேவதையா ...? தோகை மயில் அழகியா ...? மானிட பெண் தாரகையா ...? என்னை கொல்லும் யார் நீ ...? +++ குறள் - 1081 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. +++ திருக்குறள் வசனக்கவிதை