காதல் நோயை அனுபவிப்பாள் .....!!!

காதல் நோயை அனுபவிப்பாள் .....!!!
 
நான் படும் வேதனையை 
என்னவளும் படுவாள் 
கடல் ஆழத்தை 
காணமுடியாதது போல் 
எனவளும் காதல் நோயை 
அனுபவிப்பாள் .....!!!

நான் ஆண் மகன் 
மடலேரவும் துணிந்து விடுவேன் 
மெல்லிய குணங்களை கொண்ட 
என்னவளோ -மடலேற மாட்டாள் 
இத்தகைய பண்பை உடைய 
பெண்கள் புனித பிறப்புக்கு 
நிகர் ஏதுமில்லை ...!!!

திருக்குறள் : 1137
+
நாணுத்துறவுரைத்தல் 
+
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் 
பெண்ணின் பெருந்தக்க தில்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 57

 

கருத்துகள்