அந்த சுகத்தை தந்தாய்

அந்த சுகத்தை தந்தாய் 

என்னவளே 
அழகிய சிற்பமே ...
உன்னிடம் இருந்து தானடி 
மாநிறம் என்ற சொல்லே 
தோன்றியதோ ....?

தானே உழைத்து 
தானே கட்டிய வீட்டில் 
குடியிருப்பது ஒரு சுகம் 
அந்த சுகத்தை தந்தாய் 
உயிரே நீ என்னை தழுவும் 
இன்பமடி ....!!!


திருக்குறள் : 1107

புணர்ச்சிமகிழ்தல்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. 


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 27

கருத்துகள்