என் காதல் பரவி கிடக்குறது ...!!!

என் காதல் பரவி கிடக்குறது ...!!!
 
என் காதல் 
யாரும் அறியாதவாறு 
என் மன அடக்கத்தால் ..
யாருக்கும் தெரியவில்லை 
என்றிருந்தேன் ....!!!

என் காதல் 
தெருத்தெருவாய் 
அம்பலும் அலருமாய்
சுற்றிச் சுற்றி வருகிறது....!
காதலை காமத்தை 
நீண்டகாலம் மறைத்து 
வைத்திருக்க முடியாதோ ...?


திருக்குறள் : 1139
+
நாணுத்துறவுரைத்தல் 
+
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் 
மறுகின் மறுகும் மருண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 59

கருத்துகள்