என்னவன் மனமிரங்கி ....

என்னவன் மனமிரங்கி ....

கண்டது கனவல்ல ...
என்னவன் விட்ட தூது ....
நான் புலம்பிய புலம்பலுக்கு 
என்னவன் மனமிரங்கி ....
அனுப்பிய எண்ண தூது....!!!

என்னிடம் வந்த கனவே ...
உன் மூலம் என்னவனுக்கு ...
என்ன  விருந்து  படைப்பேன் ....?
என்ன கைமாற்றை தருவேன் ...!!!

குறள் 1211
+
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு 
யாதுசெய் வேன்கொல் விருந்து.
+
 கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 131

கருத்துகள்