நினைவும் ஒரு எதிரி தான் .....!!!

நினைவும் ஒரு எதிரி தான் .....!!!

நினைவும் 
ஒரு எதிரி தான் .....
நினைத்து கொண்டே 
இருப்பதால் ...
கனவு காண்பது எப்படி ...?

ஏய் நினைவே ...
நீ மட்டும் என்னில் ....
இல்லாமல் ...
இருந்திருந்தால் -கனவில் 
என்னவன் என்னோடு ...
இருந்திருப்பாரே ....!!!

குறள் 1216

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் 
காதலர் நீங்கலர் மன்.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 136

கருத்துகள்