உயிர்வாங்கும் பொழுது ...!!!

உயிர்வாங்கும் பொழுது ...!!!

மாலை பொழுதே ....
நான் காதலருடன் இருந்த ...
இன்ப பொழுதில் -நீ 
மாலை பொழுதாய் ...
இருந்தாய் .....!!!

என்னவனை ....
பிரிந்திருக்கும் பொழுது ...
இது மாலை பொழுதல்ல ...
என்னை கொல்லும்....
உயிர்வாங்கும் பொழுது ...!!!

குறள் 1221
+
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் 
வேலைநீ வாழி பொழுது.
+
பொழுதுகண்டிரங்கல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 141

கருத்துகள்