என்றோ இறந்திருப்பேன் ....!!!

என்றோ இறந்திருப்பேன் ....!!!

என்னவனே ....
நினைவில் நேரில் வந்து ...
இன்பத்தை தராதவனே ...
இன்னும் நான் உயிருடன் ..
இருக்கிறேன் ....!!!

கனவில் வந்து -நீர் 
போவதால் தான் என் ...
உயிர்  இருக்கிறது ....
கனவிலும் வராது போனால் ...
என்றோ இறந்திருப்பேன் ....!!!

குறள் 1213
+
நனவினால் நல்கா தவரைக் கனவினால் 
காண்டலின் உண்டென் உயிர்.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 133

கருத்துகள்