நீர் கனவில் வரும் இன்பம்

நீர் கனவில் வரும் இன்பம் 

என்னவனே ...
உம்மை நேரில் கண்ட ...
இன்பம் போல் இருக்கிறது ..
நீர் கனவில் வரும் இன்பம் ....

உண்மையை சொன்னால் ....
எனக்கு ஒரு வேறுபாடும் ...
தெரியவில்லை நீர் ....
கனவில் வரும் வேளை ...!!!

குறள் 1215

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் 
கண்ட பொழுதே இனிது.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 135

கருத்துகள்