நீ என்னில் அன்பு காட்டாமல்...

நீ என்னில் அன்பு காட்டாமல்...

என்னவனே ....
நீ என்னில் அன்பு காட்டாமல் ...
எத்தனை நாள் இருந்தாலும் ..
இருந்து விட்டு போ ....!!!

உன்னிடம் இருந்து 
வரும் ,வரப்போகும் ...
செய்திகள் எனக்கு ..
எப்போதும் இன்பம் ...
செவிகளுக்கு இன்ப.. 
ஊற்றுதான்உயிரே ,....!!!


திருக்குறள் : 1199
+
தனிப்படர்மிகுதி
+
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு 
இசையும் இனிய செவிக்கு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 119

கருத்துகள்