இன்பத்தோடு இருக்கிறேன் ....

இன்பத்தோடு இருக்கிறேன் ....

நீர்  நேரில் வந்து ....
அன்பு காட்டாவிட்டாலும் ...
இன்பத்தோடு இருக்கிறேன் ....
அத்தனைக்கும் நீர் ...
கனவில் வந்து செல்வதே ...
காரணம் ....!!!

நீர் 
இருக்கும் இடம் தெரியாது ....
என்ன செய்கிறீர் என்றும் ...
தெரியாது ....
கனவு எல்லாவற்றையும்...
எனக்கு காட்டுகிறது ....!!! 

குறள் 1214

கனவினான் உண்டாகும் காமம் நனவினான் 
நல்காரை நாடித் தரற்கு.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 134

கருத்துகள்