என்னவனின் இதயத்துக்கு ...

என்னவனின் இதயத்துக்கு ...

என் நெஞ்சே ...
நீ வாழ்க உன்னை ...
எப்படி போற்றுவேன் ..?
இத்தனை துன்பத்தை ...
அனுபவிக்கும் உன் பண்பை ...
எப்படி போற்றுவேன் ...?

உன்னிடம் அன்பில்லாத ...
சடப்பொருளை கொண்ட ...
என்னவனின் இதயத்துக்கு ...
நீ உன் துன்பத்தை கூறி ...
என்ன பயன் ...?
இதை காட்டிலும் -மனமே ...
நீ கடலைத் தூர்ப்பது எளிது ...!!!

திருக்குறள் : 1120
+
தனிப்படர்மிகுதி
+
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் 
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 120

கருத்துகள்