நான் படும் துயரத்தை ....!!!

நான் படும் துயரத்தை ....!!!

என்னவனே
அழுதழுது தோள்கள் ...
மெலிந்து விட்டன ...
முன்னைய அழகை ...
இழந்து விட்டன ....!!!

அழகாக நீர்
அணிந்த வளையல் கூட
கழண்டு விழுகின்றன ...
இதை விட என் சொல்வேன் ..
நான் படும் துயரத்தை ....!!!

குறள் 1234
+
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் 
தொல்கவின் வாடிய தோள்.
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 154

கருத்துகள்