இதயம் வெந்து துடிக்கிறேன்....!!!

இதயம் வெந்து துடிக்கிறேன்....!!!

என்னவனே ....
உன் பிரிவால் என் தோள்கள் 
என் வளையல்கள் நலிகின்றன 
துயரத்தின் கொடுமையை ...
அனுபவிக்கிறேன் ....!!!

எனது துயரை பார்த்த ....
உறவினர் உம்மை இரக்கம்....
அற்றவர் என்று சொல்லும் ...
ஒவ்வொரு நொடியும் ....
இதயம் வெந்து துடிக்கிறேன்....!!!

குறள் 1236
+
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் 
கொடியர் எனக்கூறல் நொந்து.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 156

கருத்துகள்