தணலில் வேகுதடா ...

தணலில் வேகுதடா ...

காதலனே .....
மாலை பொழுது வேளை...
தணலில் வேகுதடா ...
என் மனமும் உடலும் ...!!!

ஆயனே ...
உன் புல்லாங்குழல் ஓசை ..
மாலை பொழுதில் என்னை ...
கொல்லவரும் கருவியின் ... 
ஓசைபோல் இருக்குதடா ...!!!

குறள் 1228
+
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் 
குழல்போலும் கொல்லும் படை.
+
பொழுதுகண்டிரங்கல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 148

கருத்துகள்