கை நழுவி விழுகின்றன ....

கை நழுவி விழுகின்றன  ....

என்னவனின் பிரிவால் ....
அழகிய வளையல்கள் ...
கை நழுவி விழுகின்றன  ....
பூரித்த தோள்கள் நலிந்து ...
வருகின்றன ....!!!

என்னவனே ...
தேய்ந்த தோள்கள் ...
உன் பிரிவால் நான் ...
வாடுவதை ஊர் அறிய ...
செய்கிறதடா ....!!!

குறள் 1235
+
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு 
தொல்கவின் வாடிய தோள்.
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 155

கருத்துகள்