நெஞ்சே ஒரு தூது செல் ...

நெஞ்சே ஒரு தூது செல் ...

நெஞ்சே ஒரு தூது செல் ...
இரக்கமற்று பிரிந்திருக்கும் ...
என்னவனிடம் என் நிலையை ...
உரைப்பாயோ ...?

இடை மெலிந்து ...
தோள் மெலிந்து - என் ...
வளையல் இடும் கைகள் ..
மெலிந்து துடிப்பதை -அவரிடம் 
சொல் நெஞ்சே - எனக்கு 
தூதுசென்ற பெருமை பெறு ...
என் நெஞ்சே ....!!!

குறள் 1237
+
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் 
பூசல் உரைத்து.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 157

கருத்துகள்