உயிரே மாய்ந்து போகிறதே ....!!!

உயிரே மாய்ந்து போகிறதே ....!!!

என்னவனே ....
உழைப்புக்காக பிரிந்தவனே ...
ஊர் விட்டு சென்றவனே ....
நம்காதலை நினைத்து வாழ்ந்து ..
கொண்டிருக்கிறேன் ....!!!

உன் நினைவால் மாய்ந்து ...
போகாத என் உயிர் -மாலை 
பொழுது வரும் வேளைகளில் ...
உயிரே மாய்ந்து போகிறதே ....!!!

குறள் 1230
+
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை 
மாயும்என் மாயா உயிர்.
+
பொழுதுகண்டிரங்கல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 150

கருத்துகள்