என் தோள்கள் நலிவதை ..

என் தோள்கள் நலிவதை ..

என்னவனே
உமை மணந்த தருணத்தில் ....
இன்பத்தால் பூரித்தது 
என் தோள்கள் ....!!!

உம்மை பிரிந்த ...
காலம் முதல் மெலிந்து ...
வருகிறது என் தோள்....
தவிக்கிறேன் துடிக்கிறேன் ..
என் தோள்கள் நலிவதை ..
பாராயோ ...?

குறள் 1233
+
தணந்தமை சால அறிவிப்ப போலும் 
மணந்தநாள் வீங்கிய தோள்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 153

கருத்துகள்