ஒளிமங்க செய்கிறதே உயிரே ....!!!

ஒளிமங்க செய்கிறதே உயிரே ....!!!
என்னவளே ....
இறுக்க பிடித்த என் கைகள் ....
உனக்கு வழியை தருமே ...
கணப்பொழுதில் இறுக்கத்தை ..
கை விட்டேன் ....!!!

என்னவளே ...
உன் நலிவடைந்த வளையல் ...
கைகள் உன் அழகிய நெற்றியை ...
ஒளிமங்க செய்கிறதே உயிரே ....!!!

குறள் 1238
+
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது 
பைந்தொடிப் பேதை நுதல்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 158

கருத்துகள்