மனசே நீ வாழ்க ....!!!

மனசே நீ வாழ்க ....!!!

காதலை தந்தவன் ....
காலமெல்லாம் வலியை ..
தருகிறான் - மனசே !!!
நீ அவரை நினைக்கிறாயே ...!

என் மனமே ....
அவர் நினைக்காதபோது ...
நீ நினைத்துகொண்டு ...
இருப்பது உன் மூடத்தனமோ ...?
மனசே நீ வாழ்க ....!!!

குறள் 1242
+
காதல் அவரிலர் ஆகநீ நோவது 
பேதைமை வாழியென் நெஞ்சு.

+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 162

கருத்துகள்