திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

உயிர் நட்பு அரண்போல் காக்கும் ....!

சொத்துகளில் ...
தலையாய சொத்து ....
நாம் தேடிப்பெறும் 
உயர் நட்பே ....!
இதைக்காட்டிலும் ....
வேறு எந்த சொத்தும் ...
சொத்தே அல்ல ...!!!

அருமையான நட்பு ...
அரண்போல் காக்கும் ....!
எவரும் நெருங்க முடியாது ...
அசைக்கவும் முடியாது ..
அசையாத சொத்து நட்பு ...!!!
+
குறள் 781
+
நட்பு
+
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 
வினைக்கரிய யாவுள காப்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 01

கருத்துகள்