கவலை எனக்கேதுமில்லை ....!!!

கவலை எனக்கேதுமில்லை ....!!!

தெரியும் நண்பா....
நீ செய்வது எனக்கு ....
தீமையில் முடியும் ....
அறிந்திருந்தேன் ....
என்றாலும் கவலை ...
எனக்கேதுமில்லை ....!!!

சிறுவயதிலிருந்து ....
நாம் பேணும் நட்பு ....
தீமைகள் வந்தாலும் ...
பொருத்துகொள்ளும்...
நண்பனே ....!!!

+
குறள் 807
+
பழைமை
+
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் 
வழிவந்த கேண்மை யவர்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -27

கருத்துகள்