அழகை நான் உணர்வேன் ....!!!

அழகை நான் உணர்வேன் ....!!!

முத்துமணியால்....
மறைந்திருக்கும் நூல்போல் ....
என்னவளே உன் அழகு ....
மறைதிருக்குதடி ....!!!

என்னதான் ....
அழகை நீ மறைத்தாலும் ....
உன்னில் மறைந்திருக்கும் ...
அழகை நான் உணர்வேன் ....!!!
+
குறள் 1273
+
குறிப்பறிவுறுத்தல் 
+
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை 
அணியில் திகழ்வதொன்று உண்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 193

கருத்துகள்