நட்பு பிரியாது தோழா ....!!!

நட்பு பிரியாது தோழா ....!!!

நண்பனே ....
நாம் கொண்ட நட்பு .....
எல்லை தாண்டாத நட்பு ....
எல்லையற்ற நட்பு ....!!!

உன்னால் எனக்கு துன்பம் ...
எதற்காக கலங்குகிறாய் ....?
என் உயிர் பிரிந்தாலும் -நம் ....
நட்பு பிரியாது தோழா ....!!!

+
குறள் 806
+
பழைமை
+
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் 
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -26

கருத்துகள்