கடவுளை காணும்போது ...

கடவுளை காணும்போது ...

கல்லை காணாதபோது ...
கடவுளை காணோம் ....
கடவுளை காணும்போது ...
கல்லை காணோம்....
என்ற பாடல்போல் .....!!!

கணவனை காணும் போது ....
அவரில் தவறுகளை காணேன் ...
கணவனை காணாத போது ...
தவறுகளையே காண்கிறேன் ... 

+
குறள் 1286
+
புணர்ச்சிவிதும்பல் 
+
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் 
காணேன் தவறல் லவை.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 206

கருத்துகள்