நான் நாடமாட்டேன் .....!!!

நான் நாடமாட்டேன் .....!!!

என்னவனின் ....
அழகு மார்பை ....
நான் வெறுக்கிறேன் .....
வீதியில் வந்தவர்கள் ....
ரசித்த அந்த மார்பை 
வெறுக்கிறேன் .....!!!

எச்சில் 
பட்ட என்னவனின் .....
மார்பை இனிமேல் நான் ...
நாடமாட்டேன் .....!!!


+
குறள் 1311
+
புலவி நுணுக்கம் 
+
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் 
நண்ணேன் பரத்தநின் மார்பு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 231

கருத்துகள்