மன்னித்துவிடாதே ....!!!

மன்னித்துவிடாதே ....!!!

நண்பா ....
அறியாமையை அறிந்து கொள் ....
அறியாமல் தவறு செய்தால் ....
மன்னிக்கலாம் .....
அறிந்தே தவறுசெய்தால் ....
மன்னித்துவிடாதே ....!!!

தீமை என்று தெரிந்தும் ,,,,
நட்பு என்று சொல்லிகொண்டு .....
வரபோகும் நன்மையை ....
அறியாமல் விடுவதே ....
அறியாமையாகும் .....!!!

+
குறள் 831
+
பேதைமை
+
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு 
ஊதியம் போக விடல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 51

கருத்துகள்