என்னை அப்படி பார்க்கவேண்டாம் ...

என்னை அப்படி பார்க்கவேண்டாம் ...

பேசினால் தானே ...
பிரச்சனை பேசாமல் ....
இருந்து அவளின் அங்கத்தை ....
பார்த்துகொண்டிருந்தான் ....!!!

ஓ ...யாருடைய மேனிபோல் ....
என் மேனி இருக்கிறது என்று ....
பார்க்கிறீரோ ....? சீ சீ சீ 
என்னை அப்படி பார்க்கவேண்டாம் ...
சினங்கொண்டாள் அவள் ....!!!

+
குறள் 1320
+
புலவி நுணுக்கம் 
+
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் 
யாருள்ளி நோக்கினீர் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 240

கருத்துகள்