அன்பு கவிதை வாசகர்களே

அன்பு கவிதை வாசகர்களே
----------------------------

திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் 
பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கடந்த பலமாதமாய் கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன் .

இந்தவகையில் கவிதை முறையை யான் இதுவரை வேறு எங்கும் பார்த்ததில்லை . என் மொத்த கவிதை அனைத்தும் சொந்த கவிதையே இன்று 19.09.2015 வரை எழுத்து தளத்தில் 6300 கவிதை எழுதியுள்ளேன் .

அதில் 250 கவிதை இன்பத்துப்பால் கவிதையாக அமைவதில் மிக்க சந்தோசம் .ஆனால் வாசக பெருமக்களே இதுபோன்ற கவிதைக்கு தரும் ஊக்கம் போதாது என்றே கூறுவேன் . இன்று இந்த 
திருக்குறள் கவிதை ஒரு சின்ன விடயமாக இருக்கலாம் . என்றோ ஒருநாள் தமிழ் ஆவலர் .திருக்குறள் 
ஆவலர் கண்ணில் இது படும்போது இதன் முக்கியத்துவம் உணரப்படும் என்று நம்புகிறேன் .
இன்னுமொரு எழுத்தாளர் " இதைவிட சிறப்பாக எழுதுவதற்கு இது உதவலாம் " என்ற மகிழ்சியுடன் 
என் எண்ணத்தை முடிக்கிறேன் 

நன்றி 
கே இனியவன்

கருத்துகள்