திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 04)
16) அகத்தால் எனக்காக நீ துடிக்கிறாய் .....!!!
எனக்கு தெரியும் அன்பே
நீ வெளி சொல்லாகவும்
வெளி மூச்சாகவும் நீ
என்னை வெறுக்கிறாய் ...!!!
நீ வெளி சொல்லாகவும்
வெளி மூச்சாகவும் நீ
என்னை வெறுக்கிறாய் ...!!!
உன் கண்ணும் உள்ளமும்
என்னையே நினைக்குதடி
புறத்தால் நீ என்னை
வெறுப்பதுபோல் நடிக்கிறாய்
அகத்தால் எனக்காக நீ
துடிக்கிறாய் .....!!!
என்னையே நினைக்குதடி
புறத்தால் நீ என்னை
வெறுப்பதுபோல் நடிக்கிறாய்
அகத்தால் எனக்காக நீ
துடிக்கிறாய் .....!!!
திருக்குறள் : 1096
குறிப்பு அறிதல்
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
ஒல்லை உணரப் படும்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 16
@}-
17) இதுவும் ஒரு உத்திதான் அன்பே ....!!!
நீ
வேண்டுமென்றே திட்டுகிறாய்
என்னை பிடிக்காதது போல்
கபடமாடுகிறாய்....!!!
எதிரியை போல் பார்க்கிறாய்
அத்தனையும் பொய் உயிரே ...
வேண்டுமென்றே திட்டுகிறாய்
என்னை பிடிக்காதது போல்
கபடமாடுகிறாய்....!!!
எதிரியை போல் பார்க்கிறாய்
அத்தனையும் பொய் உயிரே ...
மனம் முழுதும் நான்
நிறைந்திருக்கிறேன்
உன் நினைவு முழுதும்
நானே இருக்கிறேன்
என்னை
யாருக்கும் விட்டு கொடுக்க
விரும்பாத மனமே எதிரிபோல்
பார்க்கும் காதலில் இதுவும்
ஒரு உத்திதான் அன்பே ....!!!
நிறைந்திருக்கிறேன்
உன் நினைவு முழுதும்
நானே இருக்கிறேன்
என்னை
யாருக்கும் விட்டு கொடுக்க
விரும்பாத மனமே எதிரிபோல்
பார்க்கும் காதலில் இதுவும்
ஒரு உத்திதான் அன்பே ....!!!
திருக்குறள் : 1097
குறிப்பு அறிதல்
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறா அர்போன்று உற்றார் குறிப்பு
உறா அர்போன்று உற்றார் குறிப்பு
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 17
@}-
18) புரிந்ததடி உன் காதலின் ஆழம் .....!!!
என்னை தெரியாததுபோல்
பேசுகிறாய் ...
என்னை பார்க்காததுபோல்
போகிறாய் ....
உன் தோழிகளுடன் என்னை
பிடிக்காதது போல்
நடிக்கிறாய் ....!!!
பேசுகிறாய் ...
என்னை பார்க்காததுபோல்
போகிறாய் ....
உன் தோழிகளுடன் என்னை
பிடிக்காதது போல்
நடிக்கிறாய் ....!!!
அத்தனையும் பொய்யாச்சு
கண்ணே - நான் உன்னை
காதல் கொண்ட கருணை
பார்வையால் - உன் காதல்
சிரிப்பில் புரிந்ததடி
உன் காதலின் ஆழம் .....!!!
கண்ணே - நான் உன்னை
காதல் கொண்ட கருணை
பார்வையால் - உன் காதல்
சிரிப்பில் புரிந்ததடி
உன் காதலின் ஆழம் .....!!!
திருக்குறள் : 1098
குறிப்பு அறிதல்
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
பசையினள் பைய நகும்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 18
@}-
19) காதல் ரகசிய நாடகம் ....!!!
உன்னை எனக்கு தெரியாது
எனக்கு உன்னை தெரியாது
என்று ஒருவரை ஒருவர்
நோக்கும் மாயவித்தை
காதலில் தவிர எங்குண்டு ...?
எனக்கு உன்னை தெரியாது
என்று ஒருவரை ஒருவர்
நோக்கும் மாயவித்தை
காதலில் தவிர எங்குண்டு ...?
இரண்டு வெறுமையில்
காதல் மலருமோ ...?
முன் அறியாததவர்கள் போல்
ஏக்கம் கொண்டு பார்ப்பது
காதலர்கள் இடையே நடக்கும்
காதல் ரகசிய நாடகம் ....!!!
காதல் மலருமோ ...?
முன் அறியாததவர்கள் போல்
ஏக்கம் கொண்டு பார்ப்பது
காதலர்கள் இடையே நடக்கும்
காதல் ரகசிய நாடகம் ....!!!
திருக்குறள் : 1099
குறிப்பு அறிதல்
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
காதலார் கண்ணே உள
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 19
@}-
20) காதல் கண்களால் பேசும் உயிர் பரிமாற்றம் ...!!!
என்
காதலை என் பார்வையால்
சொல்லிவிட்டேன் ....!!!
உன்
காதலை உன் பார்வையால்
சொல்லி விட்டாய் ....!!!
காதலை பரிமாற்றும்
ஊடகம் பார்வைதானடி ...!!!
காதலை என் பார்வையால்
சொல்லிவிட்டேன் ....!!!
உன்
காதலை உன் பார்வையால்
சொல்லி விட்டாய் ....!!!
காதலை பரிமாற்றும்
ஊடகம் பார்வைதானடி ...!!!
இதற்கு மேல் எதற்கு
வாய் மொழி பரீட்சை ..?
காதல் கண்களால் பேசும்
உயிர் பரிமாற்றம் ...!!!
வாய் மொழி பரீட்சை ..?
காதல் கண்களால் பேசும்
உயிர் பரிமாற்றம் ...!!!
திருக்குறள் : 1100
குறிப்பு அறிதல்
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
என்ன பயனும் இல.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 20
கருத்துகள்
கருத்துரையிடுக