திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 11)

கொடுமை தரவில்லை ...!!!
 என்னவளும் நானும் 
இன்புற்ற இன்பம் இனிமை
இன்பம் இல்லாமல் இருக்கும்
இந்தவேளையில் அந்த இன்பம்
கொடுமை தரவில்லை ...!!!


அவளை நான் மீண்டும் 
அடையும் வரை அவள் தந்த
இன்பமும் நினைவுகளும் தான்
அவளை அடையும் வரை
என் துணைவி ...!!!


திருக்குறள் : 1131
+
நாணுத்துறவுரைத்தல்
+
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 51

@}-

துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!
 அவளின் பிரிவை இனியும் 
தாங்கமுடியாது ...!!!
என் உயிரும் உடலும்
துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!

நாணத்தை துறந்தேன்
பாதுகாப்பான முறையில்
மட குதிரை ஏற துணிந்து
விட்டேன் .....!!!

திருக்குறள் : 1132
+
நாணுத்துறவுரைத்தல்
+
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 52

@}-

எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் ....!!!
 என்னவளை இன்புறமுன்
நாணமும் ஆண்மையும்
கொண்டவனாய் இருந்தேன்
என்னவளை இன்புற்றபின்
எல்லாவற்றையும் இழந்து
நிற்கிறேன் ....!!!


அவள் தந்த இன்பம் 
என்னையும் ஆண்மையையும்
தொலைத்து விட்டது
எல்லாவற்றையும் மறந்து
மடலேறப்போகிறேன்...!!!

திருக்குறள் : 1133
+
நாணுத்துறவுரைத்தல்
+
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 53

@}-

கட்டழகனாக இருந்தேன் 
 கட்டழகனாக இருந்தேன் 
ஆணழகனாகவும் இருந்தேன்
ஆண்மை மாறாத பண்புடனும்
இருந்தேன் ...!!!

அத்தனையும் போனது 
காற்றில் அடிபட்டுப்போன
கப்பல் போல் ...
என்னவளின் மீது இருந்த
இன்ப மோகத்தால் ...!!!

திருக்குறள் : 1134
+
நாணுத்துறவுரைத்தல்
+
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 54

@}-

இருள இருள எங்கும் என் மனசு ...!!!
 இருள இருள எங்கும் 
என் மனசு ...!!!
துடிக்கும் மனசுக்கும்
ஏங்கும் இளமைக்கும்
மருந்தாய் இருப்பவள்
என்னவள் தான் ...!!!


அத்தனை சுகத்தையும் 
தந்தவள் என் மனது கன்னி
அவளின் வளையல் நிறைந்த
மெல்லுடல் தானே தந்தது ...!!!

திருக்குறள் : 1135
+
நாணுத்துறவுரைத்தல்
+
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 55

கருத்துகள்