திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 14)

எட்டு திக்கும் பேசப்படுகிறதே ....!!!
என்னவனை 
காண்பதும் பேசுவதும் ...
மிக அரிது அவனை
நெஞ்சில் சுமந்தே இன்பம்
காணுகிறேன் .......!!!

ஊரார் 
பேச்சு கடும் பேச்சு ....
வாயில் வந்தபடி என் காதல்
உலாவுகிறதே ....
நிலவை பாம்பு பிடிப்பது
போல் - என் காதல் கதை
எட்டு திக்கும் பேசப்படுகிறதே ....!!!

திருக்குறள் : 1146
+
அலரறிவுறுத்தல்
+
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 66

காதல் செடி வளர உதவுகிறார்கள் 

பேசுங்கள் பேசுங்கள் ...
நன்றாக பேசுங்கள் ....
ஊர் பெண்கள் சேர்ந்தால் ...
சும்மாவா விடுவீர்கள் ...?

ஊர் மக்களின் பேச்சும்...
என் தாயின் கடும் சொல்லும்...
என் காதலுக்கு உரமும்....
தண்ணீரும் போல் ...
இவர்களே என் காதல் செடி
தளர்த்து ஒங்க உதவுகிறார்கள் ....!!!

திருக்குறள் : 1147
+
அலரறிவுறுத்தல்
+
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 67

அணைக்க துடிக்கிறார்கள் ...!!!

எங்கள் காதலை
யாரும் எவரும் அழித்து
விட முடியாது - ஊரார்
என்ன பேசினாலும் என்ன
நடவடிக்கை எடுத்தாலும்
எம் காதல் அழியாது ...!!!


எம் காதலை ...
ஊரார் பேசி பேசி அழித்து..
விடலாம் என்று பகல் ...
கனவு காண்கிறார்கள் ....
நெய்யை ஊற்றி நெருப்பை
அணைக்க துடிக்கிறார்கள் ...!!!


திருக்குறள் : 1148
+
அலரறிவுறுத்தல்
+
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 68

உறுதியாய் கூறி விட்டான் ....!!!

என்
நெஞ்சில் நிறைந்தவன்
கலங்காதே கை பிடிப்பேன்
என்று விட்டான் -என் காதலை
ஏற்று விட்டான் .....!!!

எதற்காக நான் 
அஞ்ச வேண்டும் ..?
ஊராருக்கு இனி எதற்கு
தயங்க வேண்டும் ...?
உயிரானவன் உறுதியாய்
கூறி விட்டான் ....!!!


திருக்குறள் : 1149
+
அலரறிவுறுத்தல்
+
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 69

கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!

என்னவனையும் ..
என்னையும் பற்றியே
ஊரார் பேசுகிறார்கள் ..
அதுவும் ஒருவகையில்
நன்மைதான் .....!!!

ஊரார் பேசிவிட்டார்கள் 
ஊர் முழுதும் பரவிவிட்டது
ஊரறிய என்னவன் என்னை
கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!

திருக்குறள் : 1150
+
அலரறிவுறுத்தல்
+
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 70

கருத்துகள்