திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 17)

வலியை மறைக்கிறேன் ...!!!

காதலின் வலி
காலத்துக்கும் கொல்லும்...
மரண வலி -யாரும் ..
அறியாமல் இருக்க ...
வலியை மறைக்கிறேன் ...!!!


என் துன்பங்களை ...
மறைக்க மறைக்க தான்
என் காதல் வலியும்...
ஊற்று போல் ஊறிக்கொண்டே
இருக்கிறது ....!!!



திருக்குறள் : 1161
+
படர்மெலிந்திரங்கல்
+
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 81






@}-

என்னவன் தந்து விட்டான் ....!!!

காதலின் துன்பத்தை
மறக்கவும் முடியாது
மறைக்கவும் முடியாது
மறைக்க முடியாத வலியை
என்னவன் தந்து விட்டான் ....!!!


என்னவனே
நீ தந்த காதல் வலியை
உன்னிடமும் சொல்ல
வெட்கம் தடுகிறது ...
அத்தனை இன்பத்தை
தந்தவனே .....!!!




திருக்குறள் : 1162
+
படர்மெலிந்திரங்கல்
+
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 82






@}-

உயிர் வலிக்கிறது 

இரு தலை
கொல்லி எறும்பு போல் ...
ஒருபுறம் காதல் வலியை..
தாங்க முடியாமல்
உயிர் வலிக்கிறது
மறு புறம் சொல்ல முடியாமல்
நாணம் தடுக்கிறது ....!!!




காதலால் ...
என்னை காவடிபோல்
ஆக்கியவனே - உன் நினைவுகள்
நாணங்கள் காவடிபோல்
ஆடவைக்கிறது ....!!!



திருக்குறள் : 1163
+
படர்மெலிந்திரங்கல்
+
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 83





@}-

ஏங்கி துடிக்குது மனம் ...!!!

என் இதயம்
ஒரு காதல் கடல் ...
வலியாலும் வெட்கத்தாலும்...
காதல் கடல் ....
அலைமோதுகிறது ...!!!


காதல் கடலில் நின்று
தத்தளிக்கிறேன் ..
கரை ஒதுங்க ஏங்குகிறேன் ...
ஓடமாக ஏதுமில்லாமல் ..
ஏங்கி துடிக்குது மனம் ...!!!



திருக்குறள் : 1164
+
படர்மெலிந்திரங்கல்
+
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 84





@}-

பகைவனாக மாறி விட்டால்...? 

போதுமடா...
நீ தரும் வலி ....
இன்பமாக இருக்கும் ....
போதே இத்தனை வலியை...
தருபவனே ....!!!


சில வேளை
பகைவனாக மாறி விட்டால்
என்னென்ன
வலிகளையெல்லாம்
தருவாயோ உயிரே .....!!!



திருக்குறள் : 1165
+
படர்மெலிந்திரங்கல்
+
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 85

கருத்துகள்