திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 25)

நம் பிரிவு ஒரு பிரிவல்ல ....!!!
இதயமானவளே ...
உன்னை நினைக்கும் போது ...
இன்பத்தை ஊற்றாய் தருகிறாய் ...
இன்ப கடலில் நீந்தவைகிறாய்....
நம் பிரிவு ஒரு பிரிவல்ல ....!!!

உடலால் பிரிந்திருக்கிறோம்...
நினைவால் இணைந்திருக்கிறோம் ...
உயிராய் இணைந்திருந்தபோது ...
நீ தந்த இன்பத்தை காட்டிலும் ...
பிரிவின் போது வரும் இன்பம் ...
மதுவை காட்டிலும் இன்பம் தரும் ..
மாதுவடி நீ .....!!!


திருக்குறள் : 1121
+
நினைந்தவர்புலம்பல்.
+
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 121

^^^^^^^^^^^^^^
 காதலே  - இனியது..!!!
நாம்
என்ன அன்பில்லாமல் ....
இணைந்தவர்களா..?
இல்லை -  உள்ளத்தால் ..
உயிரால் இணைந்தவர்கள் ....!!!

விரும்பி இணைந்த நாம் ..
பிரிந்து வாழ்கிறோம் ...
நம் பிரிவு பிரிவல்ல ...
நினைவுகளால் இன்பம் ...
காணும் காதலே  - இனியது..!!!

திருக்குறள் : 1122
+
நினைந்தவர்புலம்பல்.
+
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 122

^^^^^^^^^^^^^^^^
 நினைக்காமல் இருப்பாயோ  ..?
வரும் தும்மலை ...
தும்ம முயற்சிக்கும் போது ...
வராமல் விடும் தும்மல் போல ...
தும்மல் இல்லை என்ற ..
அர்த்தம் இல்லையே....!!!

என்னவனே ....
நீ அருகில் இல்லை ...
அதற்காக நீ என்னை ...
நினைக்கவில்லை என்று ...
நான் கருதமாட்டேன் ....!!!
என் நினைவில் துடிப்பானே  ..
நினைக்காமல் இருப்பாயோ  ..?


திருக்குறள் : 1123
+
நினைந்தவர்புலம்பல்.
+
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 123

^^^^^^^^^^^^^^^^
 நீ நிறைந்திருப்பதுபோல்..!!
என் இதயத்தில் ....
கோயிலாய் இருப்பவனே ...
என் இதயத்தில் முழு மூச்சும்
நீ தானேடா என்னவனே ....!!!

என் இதயத்தில் ...
நீ நிறைந்திருப்பதுபோல் ...
உன் இதயத்தில் நான் ...
இல்லாமலா இருப்பேன் ...?
என்னவனே நான் உன்னுள் ..
இருக்கிறேனா ....?


திருக்குறள் : 1124
+
நினைந்தவர்புலம்பல்.
+
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 124

^^^^^^^^^^^^^^^

வெட்கம் இல்லையோ ...?
என்னவனே ....
என் இதயத்தில் குடி ...
கொண்டிருப்பவனே ...
நினைவுகளால் .....
விளையாடுபவனே ....!!!

தங்கள் ...
இதயத்தில் எனக்கு  ...
இடம் கொடுக்காமல் ...
இருக்க உங்களுக்கு ...
வெட்கம் இல்லையோ ...?
இது என்ன நியாயம் ...?


திருக்குறள் : 1125
+
நினைந்தவர்புலம்பல்.
+
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கருத்துகள்