திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 41)

காதலை நினைத்தாலே இன்பம் 

மது பருகினால் .....
இன்பத்தை ...
பெருகித்தரும் ....
காதல் இன்பம் ...
பார்த்தவுடனேயே ....
பெருகும் .....!!!

காதல் ...
நினைத்தாலும்... 
பார்த்தாலும் ....
இன்பம் தரும் ....
இன்பஊற்று ...!!!

+
குறள் 1281
+
புணர்ச்சிவிதும்பல் 
+
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 201

#########

காதல் பனையளவு வந்தாலும் ....

காதல் 
பெண்களுக்கு ....
பனையளவு பெருகிவரினும்....
காதலனுடன் ...
கடுகளவேணும்...
ஊடல் கொள்ளாதிருக்க ...
வேண்டும் .....!!!

காதல் எத்தனை ...
இன்பத்தை தந்தாலும் ....
காதலி நிலைகுலையாது ...
காத்தல் நன்று ....!!!

+
குறள் 1282
+
புணர்ச்சிவிதும்பல் 
+
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 202

#########

நீ என்னை பார்க்காமல் ....

என்னவனே 
என்னை நீ அவமதித்து ...
எதை செய்தாலும் ...
என் கண்கள் உன்னையே ...
தேடுமன்பே.....

நீ 
என்னை பார்க்காமல் ....
உமது வேலைகளை ...
செய்தாலும் என் கண்கள் ...
உன்னையே தேடுமடா ...
என்னவனே ....!!!
+
குறள் 1283
+
புணர்ச்சிவிதும்பல் 
+
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 203

#########

உன்னை கண்டவுடன் ...

என்னவனே ...
உன்னை கண்டவுடன் ...
நீ செய்த தவறெல்லாம் ....
பஞ்சாய் பறக்குதடா ....!!!

என் மனசோ ...
நீர் தந்த துன்பம் எல்லாம் 
மறத்து இணையவே ...
துடிக்கிறது ....!!!

+
குறள் 1284
+
புணர்ச்சிவிதும்பல் 
+
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 204

##########

அத்துனையும் மறப்பேன் அன்பே ....!!!

கண்ணுக்கு மைதீட்டும் ....
கருவி காணாமல் ...
போனதை தேடுவதுபோல் ...!!!

என்னவனை ...
கண்ணும்போது ...
தந்த துன்பத்தையெல்லாம் .....
மறந்து இன்பம் தேடுவேன் ....!!!
+
குறள் 1285
+
புணர்ச்சிவிதும்பல் 
+
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 205

கருத்துகள்