திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 43 )

பனிபோல் உருகுகிறாய் ,,,,?

மனமே ....
என்னை நினைக்காமல் ....
இருக்கும் என்னவனின் ....
மனம் கல்லாய் இருக்கும் ...
போது மனமே நீமட்டும் ....
ஏன் துடிக்கிறாய் ....?

கல் நெஞ்சுடைய .....
என்னவனுக்காய் ....
என் மனமே எதற்கு ....?
பனிபோல் உருகுகிறாய் ,,,,?
+
குறள் 1291
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 211

@@@

மனமே உனக்கு தெரிகிறது ...!!!

ஓ மனமே ....
உனக்கு தெரிகிறது ...
என்னவன் நம்மை ....
நினைக்காதபோதும் ...
எம்மில் பகையில்லை ...!!!

மனசே .....
நாம் என்னவனிடம் ....
சென்றால் அவன் ....
மன்னிப்பான் என்று ....
தெரிந்ததாலோ எனக்கு ...
முன் நினைக்கிறாயோ....?

+
குறள் 1292
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 212

@@@

என் அனுமதியில்லாமல் ...

என் மனமே ....
என் அனுமதியில்லாமல் ...
எப்படி எனவனிடம் -நீ
அடிகடி சென்று வருகிறாய் ...?

இந்த உலகில் .....
இரக்கமில்லாத மனசுக்கு ....
இரக்கத்தை கற்பிக்க - நீ
சென்றாயோ ....?

+
குறள் 1293
+
நெஞ்சொடுபுலத்தல்
+
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 213
 
@@@

எனைவனை கண்டவுடன் ....

என் மனசே ....
எனைவனை கண்டவுடன் ....
இன்பம் கொள்ள ஓடுகிறாய் ....
என்னவனின் தவறுகளை ....
புரிந்தால் நீ அவரை ....
அணுகமாட்டாய்......!!!

ஏதோ என் மனமே ....
நீயும் அவரும் பட்டுதெளி ....
என்னால் முடியாது மனசே ....
உன்னை சமாதானபடுத்த....!!!

+
குறள் 1294
+
நெஞ்சொடுபுலத்தல்
+
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 214
 
@@@
 
பிரிந்துவிடுவாரோ 

என் மனம்படும் ......
வேதனையை கேளீர் ....
என்னவன் அருகில் இருந்தால் ...
பிரிந்துவிடுவாரோ என்று .....
ஏங்கும் - அவர் இல்லை என்றால் ....
இல்லையே என்று ஏங்கும் ....!!!

என்னவன் இருந்தாலும் .....
இல்லாவிட்டாலும் ....
என் மனம் வேதனையில் ...
வேந்தே போகிறது .....!!!
+
குறள் 1295
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 215

கருத்துகள்