திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 44 )

நினைவுகள் கொல்லும்.....!!!

தனிமை ஒரு கொடுமை
என்னவனை தனியே ...
இருந்து நினைக்கும்போது ....
அதன் வலியோ கொடுமை ....!!!

காதலனை பிரிந்து ...
வாழும் காதலியை ....
அணு அணுவாய் ......
நினைவுகள் கொல்லும்.....!!!

+
குறள் 1296
+
நெஞ்சொடுபுலத்தல்
+
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 216
 
@@@
 
கண்டவுடன் என் மனம் ....

என்னவனை ....
மறக்கமுடியாமல் ....
அவஸ்தைப்படும் ...
என் மனமோ ஒரு ....
மடந்தை ......!!!

என்னவனை .......
கண்டவுடன் என் மனம் ....
நாணத்தை மறந்து ....
கூடலையே மனமும் ....
நாடுதே .....!!!
+
குறள் 1297
+
நெஞ்சொடுபுலத்தல்
+
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 217
 
@@@
 
என்னவன் பிரிவு வதைக்கிறது 

என் உயிரோடு கலந்த ....
காதலை கொண்ட மனமே .....
என்னவன் பிரிவு உன்னை ...
வதைக்கிறது உண்மையே ....!!!

மனமே ....
என்னவனை இழிவுபடுத்தாதே ....
என்னவனை கண்டதும் ....
கலவி கொள்வாய் -நீ 
தலைகுனிவாய் .....!!

+
குறள் 1298
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 218
 
@@@

துன்பத்தை தாங்குவதே மனதின் கடமை 

துன்பத்தை தாங்குவதே ......
மனதின் கடமை ....
துன்பத்தை தாங்காத ......
மனமொன்று இருந்து ....
என்ன பயனுண்டு ......?

ஒருவனுக்கு ....
உற்ற தோழன் அவனின் ....
மனமே - அதுவே ....
மனமுடைந்தால் -மனம் 
என்ற ஒன்றிருந்து பயனில்லை .....!!!
+
குறள் 1299
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 219

 
@@@
 
என்னுடைய மனமே ....

என்னுடைய மனமே ....
எனக்கு உறுதுணையாக....
இல்லாதபோது - என் மனமே 
எனக்கே எதிரியாக உள்ளபோது ....!!!

என் உறவுகள் எனக்கு ....
உறவாக இல்லாது ....
எதிரியாக இருப்பது ......
புதிரான விடையமல்ல .....!!!
+
குறள் 1300
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 220

கருத்துகள்