திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 28 )
உயிர்வாங்கும் பொழுது ...!!! மாலை பொழுதே .... நான் காதலருடன் இருந்த ... இன்ப பொழுதில் -நீ மாலை பொழுதாய் ... இருந்தாய் .....!!! என்னவனை .... பிரிந்திருக்கும் பொழுது ... இது மாலை பொழுதல்ல ... என்னை கொல்லும்.... உயிர்வாங்கும் பொழுது ...!!! குறள் 1221 + மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. + பொழுதுகண்டிரங்கல் + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் கவிதை எண் - 141 ---- உன் காதலன் பிரிவுதானோ ...? மயங்கும் மாலை பொழுதே ..... உன் மயக்கத்துக்கும் ... உன் காதலன் பிரிவுதானோ ...? புரிந்து கொள் பொழுதே .... துணை இல்லாவிட்டால் ... எல்லோர் காதலும் ... துன்பம் தரும் பொழுதே ...!!! மயக்கமும் மங்களும் ... நிறைந்த துன்பமே ....!!! குறள் 1222 + புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. + பொழுதுகண்டிரங்கல் + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் கவிதை எண் - 142 ----- துன்ப பொழுது ...!!! என்னவன் அருகில் .... இருக்கும் போது மெல்ல மெல்ல பயந்து பயந்து ... என் மேனியில் படர்ந்த ... மாலை பொழுதே ....!!! இப்போ அவர் இல்லாத...