எதுவுமே நடக்காததுபோல் ....
எதுவுமே நடக்காததுபோல் .... நெருப்பில் விழுந்த .... நெய் போல் உருகுதே ... என் மனம் உயிரே ....!!! நீ கூடவும் .. நான் ஊடவும்.... நடக்கும் திருவிழாவில் ... எல்லாம் முடிந்தபின் ... எதுவுமே நடக்காததுபோல் .... மனம் நினைக்குமோ ....? + குறள் 1260 + நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல். + நிறையழிதல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 180