இடுகைகள்

ஆகஸ்ட், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனதால் நேசிக்காத நட்பு

மனதால் நேசிக்காத நட்பு மனதால் நேசிக்காத நட்பு .... நேசிப்பதுபோல் நடிக்கும் நட்பு .... காரியத்துக்காய் பழகும் நட்பு .... ஆருயிர் போல் பழகினாலும் .... அது கூடா நட்பே ....!!! உள் ஒன்று வைத்து .... புறமொன்று பழகும் நட்பை .... வளர்ப்பதை விட ஆரம்பத்தில் ... வெட்டி எரிவதே சிறப்பு ....!!! + குறள் 821 + கூடாநட்பு + சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 41

நல் நட்பாக மாறிவிடாது ....!!!

நல் நட்பாக மாறிவிடாது ....!!! --- மனதால் பொருந்தாத நட்பு .... அமிர்தம்போல் பழகினாலும் .... உடைந்த மட்பாண்டாமே.....!!! மனதுக்கு பொருந்தாத நட்பு .... ஆயிரம் ஆயிரம் நூல்களை ... வாசித்து அறிவை பெற்றாலும் .... நல் நட்பாக மாறிவிடாது ....!!! + குறள் 823 + கூடாநட்பு + பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 43

சென்றவுடன் வெறுக்கும் நட்பு ....

சென்றவுடன் வெறுக்கும் நட்பு .... --- காணும்போது சிரித்தும் .... காணாதபோது வெறுத்தும் .... பழகும் நட்பை தொடராதே ....!!! கண்டவுடன் பழகும் நட்பு ... சென்றவுடன் வெறுக்கும் நட்பு .... நெஞ்சு முழுதும் நஞ்சை கொண்டு .... பழகும் நட்பு - பகைவனுக்கு நிகர் ...!!! + குறள் 824 + கூடாநட்பு + முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 44

மனமில்லாமல் பழகும் நட்பு ....

மனமில்லாமல் பழகும் நட்பு .... --- வேண்டும் ஆனால் வேண்டாம் ... அன்பு இருக்கும் , இருக்காது சந்தேகத்துடன் பழகும் நட்பு ..... சங்கடத்தில் முடியும் .....!!! மனமில்லாமல் பழகும் நட்பு .... மனமில்லாமல் பழகும் .... பாலியல் இன்பத்துக்கு நிகர் .... இரண்டுமே வேண்டாம் மனமே ....!!! + குறள் 822 + கூடாநட்பு + இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 42

நம்பிக்கை இல்லாத நட்பே ....!!!

நம்பிக்கை இல்லாத நட்பே ....!!! --- மனத்தால் நேசிக்காத நட்பு .... மனம் நிறைந்த வார்த்தை .... வாயார உரைத்தாலும் .... உண்மை நட்பு அல்ல ....!!! ஆயிரம் ஆயிரம் .... வார்த்தைகளை உதிர்த்தாலும் .... உயிரைப்போல நடித்தாலும் ... மனத்தால் இணையாத நட்பு .... நம்பிக்கை இல்லாத நட்பே ....!!! + குறள் 825 + கூடாநட்பு + மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 45

உன்னை இழிவுபடுத்தும் நட்பு

உன்னை இழிவுபடுத்தும் நட்பு  உன்னோடு தனிமையில் .... உயிராய் பழகுவதுபோல் ..... உயிரை கொடுத்து பழகிய .... நப்பு ......!!! கூட்டத்தின் நடுவே .... உன்னை இழிவுபடுத்தும் .... சொல்லையும் செயலையும் .... செய்யுமாயின் -வேண்டாம் ... அந்த நட்பு .....!!!  + குறள் 820 + தீ நட்பு, + எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ  மன்றில் பழிப்பார் தொடர்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் - 40

கனவிலும் துன்பம் தரும் ....!!!

கனவிலும் துன்பம் தரும் ....!!! சொல்வதொன்று .... செய்வதொன்று .... உள்ளொன்று .... புறமொன்று ..... கொண்ட நப்பு ......!!! இரு தலை பண்பை ..... கொண்ட நட்புகள் .... நிஜத்தில் மட்டுமல்ல .... கனவிலும் துன்பம் தரும் ....!!! + குறள் 819 + தீ நட்பு, + கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு  சொல்வேறு பட்டார் தொடர்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -39

நடிப்போடு பழகும் நட்பைவிடு

நடிப்போடு பழகும் நட்பைவிடு  செய்ய கூடிய உதவியை .... செய்ய முடியாததுபோல் .... பாசாங்கு காட்டும் நட்பை .... தொடராதே....!!! நடிப்போடு பழகும் நட்பை .... மெல்ல மெல்ல விலக்குவதே .... அறிவுடைய ஒருவனின் ...... அற்புதமான செயலாகும் ....!!! + குறள் 818 + தீ நட்பு, + ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை  சொல்லாடார் சோர விடல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -38

பகை கொண்ட நட்பு மேல் ....!!!

பகை கொண்ட நட்பு மேல் ....!!! சிரித்து சிரித்து பழகும் .... கெட்ட நட்பை காட்டிலும் .... வெறுத்து வெறுத்து பேசும் .... பகை கொண்ட நட்பு மேல் ....!!! கெட்ட நட்பால் .... சில நன்மைகள் கிடைப்பதை .... காட்டிலும் - பகை நட்பால் .... ஆயிரம் தீமைகள் வருவது .... எவ்வளவோ மேல் .....!!! + குறள் 817 + தீ நட்பு, + நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்  பத்தடுத்த கோடி உறும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -37

உயிருக்கு உயிராய் பழகினாலும் ...

உயிருக்கு உயிராய் பழகினாலும் ... அறிவற்றவனின் நட்பு ..... உயிருக்கு உயிராய் பழகினாலும் ... உயிரைதருவேன் என கூறினாலும் .... தீய நட்பு தீயதே -தொடராதீர் ....!!! அறிவற்றவனின்  நட்பை காட்டிலும் ..... அறிவுள்ளவனின் பகை ..... பலமடங்கு உத்தமம் .......!!! + குறள் 816 + தீ நட்பு, + பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்  ஏதின்மை கோடி உறும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -36

என்னுடைய மனமே ....

என்னுடைய மனமே .... என்னுடைய மனமே .... எனக்கு உறுதுணையாக.... இல்லாதபோது - என் மனமே  எனக்கே எதிரியாக உள்ளபோது ....!!! என் உறவுகள் எனக்கு .... உறவாக இல்லாது .... எதிரியாக இருப்பது ...... புதிரான விடையமல்ல .....!!! + குறள் 1300 + நெஞ்சொடுபுலத்தல்  + தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய  நெஞ்சம் தமரல் வழி. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 220

துன்பத்தை தாங்குவதே மனதின் கடமை

துன்பத்தை தாங்குவதே மனதின் கடமை  துன்பத்தை தாங்குவதே ...... மனதின் கடமை .... துன்பத்தை தாங்காத ...... மனமொன்று இருந்து .... என்ன பயனுண்டு ......? ஒருவனுக்கு .... உற்ற தோழன் அவனின் .... மனமே - அதுவே .... மனமுடைந்தால் -மனம்  என்ற ஒன்றிருந்து பயனில்லை .....!!! + குறள் 1299 + நெஞ்சொடுபுலத்தல்  + துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய  நெஞ்சந் துணையல் வழி. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 219

என்னவன் பிரிவு வதைக்கிறது

என்னவன் பிரிவு வதைக்கிறது  என் உயிரோடு கலந்த .... காதலை கொண்ட மனமே ..... என்னவன் பிரிவு உன்னை ... வதைக்கிறது உண்மையே ....!!! மனமே .... என்னவனை இழிவுபடுத்தாதே .... என்னவனை கண்டதும் .... கலவி கொள்வாய் -நீ  தலைகுனிவாய் .....!! + குறள் 1298 + நெஞ்சொடுபுலத்தல்  + எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்  உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 218

கண்டவுடன் என் மனம் ....

கண்டவுடன் என் மனம் .... என்னவனை .... மறக்கமுடியாமல் .... அவஸ்தைப்படும் ... என் மனமோ ஒரு .... மடந்தை ......!!! என்னவனை ....... கண்டவுடன் என் மனம் .... நாணத்தை மறந்து .... கூடலையே மனமும் .... நாடுதே .....!!! + குறள் 1297 + நெஞ்சொடுபுலத்தல்  + நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்  மாணா மடநெஞ்சிற் பட்டு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 217

நினைவுகள் கொல்லும்.....!!!

நினைவுகள் கொல்லும்.....!!! தனிமை ஒரு கொடுமை  என்னவனை தனியே ... இருந்து நினைக்கும்போது .... அதன் வலியோ கொடுமை ....!!! காதலனை பிரிந்து ... வாழும் காதலியை .... அணு அணுவாய் ...... நினைவுகள் கொல்லும்.....!!! + குறள் 1296 + நெஞ்சொடுபுலத்தல்  + தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்  தினிய இருந்ததென் நெஞ்சு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 216

பிரிந்துவிடுவாரோ

பிரிந்துவிடுவாரோ  என் மனம்படும் ...... வேதனையை கேளீர் .... என்னவன் அருகில் இருந்தால் ... பிரிந்துவிடுவாரோ என்று ..... ஏங்கும் - அவர் இல்லை என்றால் .... இல்லையே என்று ஏங்கும் ....!!! என்னவன் இருந்தாலும் ..... இல்லாவிட்டாலும் .... என் மனம் வேதனையில் ... வேந்தே போகிறது .....!!! + குறள் 1295 + நெஞ்சொடுபுலத்தல்  + பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்  அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 215