திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(70-75)
"மனவேறுபாடு " ---------------------- மனிதனோடு ...... மட்டுமல்ல பகை ...... உயிரினங்கள் ..... எல்லாவற்றோடும் பகை .....!!! எல்லாவற்றோடும் .... ஒப்பிட்டு ,வேறுபடுத்தி .... தன்னை தானே குறைத்து .... மதிப்பிட்டு வாழ்வதே ..... "மனவேறுபாடு " என்பர் ....!!! + குறள் 851 + இகல் + இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 71 ------------ நண்பா ..... நீ எனக்கு எத்தனை ..... வலிகளை துன்பங்களை .... தந்தாலும் - நீ எந்தன் .... நண்பனே ......!!! இன்பத்தை தருபவன் ..... மட்டுமே நண்பன் இல்லை ..... துன்பத்தையும் தருவான் ..... சகித்து கொண்டு அவன் .... நட்பையும் தொடர்வதே .... நட்பின் சிறந்த குணம் ....!!! + குறள் 852 + இகல் + பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 72 ------------ நீக்கு நீக்கு .... மனவேறுபாடு ...... நீக்கு ......... நீக்கவேண்டியதில் ..... இதுவே முதன்மை ....!!! நீக்கிய மனவேறுபாடை ...... நீக்கிய கணமே ........ கொட்டி கிடைக்கும் ...