திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(51-55)
மன்னித்துவிடாதே ....!!! நண்பா .... அறியாமையை அறிந்து கொள் .... அறியாமல் தவறு செய்தால் .... மன்னிக்கலாம் ..... அறிந்தே தவறுசெய்தால் .... மன்னித்துவிடாதே ....!!! தீமை என்று தெரிந்தும் ,,,, நட்பு என்று சொல்லிகொண்டு ..... வரபோகும் நன்மையை .... அறியாமல் விடுவதே .... அறியாமையாகும் .....!!! + குறள் 831 + பேதைமை + பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 51 அறியாமையில் பெரும் .... அறியாமை அறிந்துகொள் .... நண்பா .....!!! அனுகூலம் இல்லையென்று .... அறிவுக்கு எட்டியபோதும் .... தொடர்ந்து அதன்மேல் பற்று .... வைத்துகொண்டு தொடர்வதாகும் .... அனுகூலம் இல்லாதவற்றை .... அறுத்துவிட வேண்டும் ....!!! + குறள் 832 + பேதைமை + பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 52 -- தீமை ஏற்பட்டால் தலை குனிந்து வெட்கப்படு ..... ரசிக்க வேண்டியவற்றை .... ரசித்து வாழ்,,,,,, அன்பு வைக்கவேண்டின் ... அன்புவை .....!!! செய்ய வேண்டிய அனைத்தையும் ..... செய்யாதிருப்பது அறியாமையி...