உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!

உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!

என்னவனே ....
நீ என்னை பிரியும் போது ...
எண்ணை அற்று மங்கும் ..
விளக்கை போல் - நானும் ...
உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!

ஒளி 
இழந்தால் இருள் படரும்  ....
உன்னை பிரிந்த போது ....
என் உடலில் காதல் பசலை ...
(தேமல் ) படர்கிறது ....!!!

திருக்குறள் : 1186
+
பசப்புறுபருவரல்
+
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் 
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
கவிதை எண் - 106

கருத்துகள்